இலங்கையிலிருந்து பிரசூரமாகும் செய்தி இணைய தளங்கள் தொடர்பில் புதிய விதிமுறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இலங்கை ஊடக முறைப்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் இயங்கி வரும் இணைய செய்தி ஊடகங்கள் எவ்வாறு எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்பது குறித்து புதிய ஒழுக்க விதிகள் தயாரிக்கப்பட உள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. செய்தி இணைய தளங்களுக்கு பொதுவான ஒழுக்க விதிகளை அறிமுகம் செய்வது குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆங்கில மொழி முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பானர் சுகுமார் ரொக்வுட் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனைத் திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர் பேரவையினால் பின்பற்றப்படும் ஒழுக்க விதிகள் இணைய ஊடகங்களுக்கும் பொருந்தும் எனவும், சில விடயங்களில் மட்டும் மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
thanks to http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=303
நாட்டில் இயங்கி வரும் இணைய செய்தி ஊடகங்கள் எவ்வாறு எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் என்பது குறித்து புதிய ஒழுக்க விதிகள் தயாரிக்கப்பட உள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. செய்தி இணைய தளங்களுக்கு பொதுவான ஒழுக்க விதிகளை அறிமுகம் செய்வது குறித்து ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் ஆங்கில மொழி முறைப்பாட்டுப் பிரிவு பொறுப்பானர் சுகுமார் ரொக்வுட் தெரிவித்துள்ளார்.
இந்த யோசனைத் திட்டம் ஆரம்ப நிலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பத்திரிகை ஆசிரியர் பேரவையினால் பின்பற்றப்படும் ஒழுக்க விதிகள் இணைய ஊடகங்களுக்கும் பொருந்தும் எனவும், சில விடயங்களில் மட்டும் மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
thanks to http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=303
No comments:
Post a Comment