Thursday, August 11, 2011

2076 இந்து கோயில்களை சிங்கள வெறியர்கள் இடித்து அழித்தார்கள்

ஒருகாலத்தில் தமிழீழத்தில் சிவ தலங்களில் தேவாரம் ஒலித்துக்கொண்டே இருக்கும். திருவிழாக் காலங்களில் இசை நிகழ்ச்சி & பரத நாட்டியம் & காவடி ஆட்டம் & கும்மி & கரகம் நடக்கும். மங்கல இசைக் கருவி நாகசுரம் இசைக்கும் & தவில் முழங்கும். அம்மன் கோயில்களில் உடுக்கை இசை எழும். பண்டைத் தமிழிசைக் கரு வியான பறை ஒலிக்கும். நாட்டுக் கூத்து விடிய விடிய நடக்கும். தேர்த் திருவிழாவில் அழகிய சிற்பத்தேர் தெரு உலா வரும்.

இன்று... சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு தமிழர்களின் இந்த சிவத் தலங்களும் தப்பவில்லை.


இலங்கைத் தீவில் கி.மு.1000இல் ஐம்பெரும் சிவன் கோயில்கள் இருந்தன என்பது வரலாறு.


திருக்கோணமலை கோணேசுவரமும் - மன்னார் திருக்கேதீசுவரமும் - கீரிமலை நகுலேசுவரமும் - சிலாபம் முனீசுவரமும் - தேவன்துறை சந்திர மவுலீசுவரமும் தமிழர்களின் சைவத் திருத்தலங்களாகத் திகழ்ந்தன.


தெற்கிலங்கையில் தேவன் துறையில் அமைந்த சந்திர மவுலீசுவரமும் - மாகாணப் பிரிவினையின் போது சிங்களவர் கையில் வீழ்ந்த சிலாபம் முனீசுவரமும் தமிழீழத்துக்கு வெளியே பறிபோயிற்று.


தமிழீழத்தின் தலைநகரான திருக்கோண மலையில் சம்பந்தரால் பாடப்பட்ட கோணேசுவரம் இன்று சிங்கள இனவெறியர்களால் சூழப்பட்ட தலமாக இருக்கிறது. இக்கோயில் அமைந்த மான்கள் விளையாடும் கோணமலைக் குன்றில், வானை முட்டும் புத்தர்சிலை ஒன்றை நிறுவித் தமிழர்களை வம்புக்கு இழுத்திருக்கிறார்கள் சிங்களவர்கள்.


மன்னாரில் - சுந்தரரால் பாடப்பட்ட திருக்கேசுவரம் கோயில் காணியில் மக்கள் எதிர்ப்பையும் மீறி முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு - ‘மகாதித்த விகாரை’ என்னும் மிகப் பெரிய புத்தர் கோயில் எழுப்பப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.


சிறப்பு மிக்க நகுலேசுவரம் அமைந்த கீரிமலை ஊரின் பெயர்கூடச் சிங்களப் பெயராய் மாற்றப்பட்டிருப்பதாகச் செய்தி.


பண்டைக் காலத்தில் அனுராதபுரத்தில் அமைந்திருந்த சிவன்கோயில் ஒன்றை அழித்து - அதன்மேல் எழுப்பப்பட்டதே ‘அபயகிரி விகாரை’ என்னும் புத்தர் கோயில் என்று, மலல சேகர - அரிச்சந்திர ஆகிய சிங்கள வரலாற்றாளர்களே பதிவு செய்திருக்கிறார்கள்.

கதிர்காமம் அது தமிழர் ஊர் என்பதை ‘கதிர்காமம்’ என்னும் தூய தமிழ்ப்பெயரே உறுதி செய்யும். காலம் காலமாகத் தமிழர் வழிபட்டு வந்த முருகன் கோயில் தலமான கதிர்காமம் இன்று தமிழர் கையில் இல்லை.

சிவ மதத்துக்கு எதிரான நெடுங்கால சிங்கள -புத்த அழிவு நடவடிக்கைகளில் சில இவை.

தமிழீழத்தில் - தெய்வ வழிபாட்டு இடங்களாக மட்டும் அல்ல - தமிழ்மொழி - தமிழ்க் கலைகள் - தமிழ்ப் பண்பாடு காப்பகங்களாகவும் சிவ தலங்கள் திகழ்கின்றன. இதன் காரணமாகவே இக் கோயில்கள் சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு இலக்காவதைப் பார்க்கிறோம்.


தமிழீழத்தில் 24.12.2003 வரை சிங்கள வான்படை நடத்திய குண்டு வீச்சில் 2076சைவக் கோயில்கள் உடைத்துத் தகர்த்து நொறுக்கப்பட்டதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


அயோத்தியில் ஒரு இராமர் கோயிலை அழித்தார்கள் என ஓங்கி முழக்கமிடும் இந்தியாவின் சிவ மதத்தினர், தமிழீழத்தில் 2076 சைவக் கோயில்களை சிங்கள - புத்த வெறியர்கள் இடித்து - உடைத்து அழித்துக் கொட்டியிருக்கிறார்களே - அமைதி காப்பது ஏன்?


முள்ளிவாய்க்காலுக்குப் பின்பு - தமிழீழத்தின் மூலை முடுக்குகள் எங்கும் - புதிது புதிதாய் புத்தர் கோயில்கள் தழைக்கத் தொடங்கி உள்ளன.


புலிகளின் தலைமையகமாகத் திகழ்ந்த கிளிநொச்சியில் புத்த விகாரை ஒன்று புதிதாக முளைத்திருக்கிறது.


செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் எழுப்பினான் என்பது வரலாற்றுச் செய்தி.சேரநாட்டு எல்லையில் அவன் எழுப்பிய மங்களாதேவி கோயிலைத் தவிர - தமிழ்நாட்டில் கண்ணகிக்கு எந்த ஊரிலுமே கோயில்கள் இல்லை.


ஆனால் - தமிழீழத்தில் ஊர்தோறும் கண்ணகிக்குத் தமிழர்கள் கோயில் எழுப்பி இருக்கிறார்கள்.


1999இல் தமிழீழத்தில் - புங்குடுதீவு கண்ணகி கோயில் குருக்களின் மனைவி சாரதாம்பாளை சிங்களப்படை வெறியர்கள் - ‘கற்பரசி’ கண்ணகி கோயிலிலேயே கற்பழித்துப் பிணமாகப் போட்டார்கள்.


தமிழர்களின் கோயிலில் நிகழ்ந்த சிங்கள இனவெறிப் படுகொலை ஒன்றுதான் பிரபாகரனை தமிழீழ விடுதலைக் களத்தில் ஆயுதப் போராளி ஆக்கியது.


பிரபாகரனே சொல்கிறார்.


‘‘கொழும்புக்குப் பக்கத்தில் பாணன்துறை சைவக் கோயில் ஒன்றில் - 1958-இல் சிங்கள இனவெறியர்கள் ஒரு தமிழ்க் குருக்களை நெருப்பு மூட்டி உயிரோடு துடிக்கத் து டிக்க எரித்துக் கொன்றார்கள். ‘நான் சின்னஞ் சிறுவனாக இருந்தபோது - எங்கள் வீட்டில் - அடிக்கடி என் பெற்றோர் அந்தக் கொடுமை பற்றி மனம் நொந்து பேசக் கேட்டிருக்கிறேன். நான் ஆயுதம் ஏந்த அந்த நிகழ்வும் ஒரு காரணம் ஆயிற்று’ என்கிறார் பிரபாகரன்.


அறம் கொல்லும் சிங்கள - புத்த இனவெறி என்னதான் வலிமைமிக்கதாக இருந்தாலும் - தமிழீழத் தேசிய இனம் பணியாது - தமிழீழ விடுதலைப்போர் தணியாது என் பதில் ஐயமில்லை.


விடுதலைக்கான தேவை இருக்கும் வரை -விடுதலைக்கான போராட்டமும் இருக்கும்.

- குமுதம் 

thanks to http://www.yarl.com/forum3/index.php?showtopic=90169

Monday, August 8, 2011

போருக்கு பின் -10 தமிழ் படித்த புத்தர் ---தமிழை அழிக்கும் சிங்களர் -காசி ஆனந்தன்

தமிழீழ மண்ணின் ஊர்ப் பெயர்கள் & தெருப் பெயர்கள் & வணிக நிலையப் பெயர்கள் அனைத்தும் பிரபாகரன் காலத்தில் தனித் தமிழ்ப் பெயர்களாய் தகதகத்தன.

இன்று -தமிழீழத்தின் அனைத்து தமிழ்ப் பள்ளிக் கூடங்களுக்கும் மீண்டும் சிங்கள ஆசிரியர்கள் அனுப்பப்படுவதாக சினமூட்டும் செய்திகள் வெளிவருகின்றன.

தமிழீழத் தேசிய இனத்தின் முதன்மை உயிர்க் கூறான தாய் மொழியாம் தமிழ்மொழி,சிங்கள இனவெறி அரசால் அழிவின் விளிம்பில் தள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு பொருள் இன்னொரு பொருளோடு நெருக்கமாக இயையும் போதில் - கல்லோடு கல் உரசுதல் -வெப்பக் கருத்தும் ஒளிக் கருத்தும் தோன்றுகின்றன என்றும் - ‘இலங்குதல்’ என்னும் ஒளி குறித்த தமிழ்ச் சொல் இப்படித்தான் தோன்றிற்று என்றும் மொழி இயலாளர்கள் சொல்கிறார்கள்.

இலங்குதல் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றியதே ‘இலங்கை’ என்னும் சொல்லாகும்.இச் சொல்லையே சிங்களர்கள் ‘லங்கா’ ஆக்கினார்கள்.

சிங்களவன் இன்று சிங்கள நாடு என்று பெருமையோடு மார்தட்டி உடல் சிலிர்க்கும் - அவன் மண்ணின் பெயர் கூட - சிறீலங்கா - சிங்கள மொழி அல்ல - தமிழேயா கும்.

சிங்கள மொழியில் 50 விழுக்காடு தமிழ்ச் சொற்கள் இருப்பதாக சிங்கள மொழி ஆய்வாளர்களே கூறுகிறார்கள்.சிங்களத்துக்குச் சொல் தந்த தமிழையே சிங்களம் அழிக்கிறது.

கி.மு. 3-ம் நூற்றாண்டுக்கும் கி.பி. 3-ம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட சங்க காலத்தில் தமிழீழத்தில் இருந்து ஈழத்துப் பூதன் தேவனார் என்னும் புலவர் தமிழ்நாடு வந்து தமிழ் பாடினார். இக் காலத்தில் சிங்களப் புலவன் எவனும் உலகில் இல்லை. ஏனெனில், சிங்கள மொழியே அன்று இல்லை.
கி.மு. 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தர் தமிழ் படித்தார் என்று ‘லலிதா விஸ்தாரம்’ என்னும் வடமொழி நூல் கூறுகிறது. புத்தர் சிங்களம் படித்தார் என்று எந்தச் செய்தியும் இல்லை. ஏனெனில், புத்தர் காலத்தில் சிங்கள மொழி இல்லவே இல்லை.

புத்த மதத்தை நெறியாக அல்ல -வெறியாகக் கொண்ட இலங்கை அரசுதான் இன்று புத்தர் படித்த தமிழுக்குப் பாடை கட்டிக் கொண்டிருக்கிறது.

நீண்ட நெடுங்காலமாக இலங்கையில் இருந்த தமிழ் ஊர்ப் பெயர்களை மாற்றி - சிங்களப் பெயர்கள் சூட்டி - தமிழ் மொழி அழிப்பிலும் - தமிழர் நிலப் பறிப்பிலும் ஈடுப ட்டு வருகிறது சிங்கள அரசு.

தேவன் துறை - ‘தொந்தறை’ ஆகியது. மாத்துறை - ‘மாத்தறை’ ஆகியது.
இப்படி தமிழ்ப் பெயர்கள் அழிக்கப்பட்ட ஊர்கள் பல - மிகப் பல.

1956-ல் அன்று தலைமை அமைச்சராக இருந்த பண்டாரநாயகா இலங்கை நாடாளுமன்றத்தில் ‘தனிச் சிங்களச் சட்டத்தை’(only Sinhalar act) நிறைவேற்றினார்.

சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே அரசுப் பணி வழங்கப்படும் என்று அறிவித்தது சிங்கள அரசு.

தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு சிங்கள ஆசிரியர்கள் அனுப்பப்பட்டார்கள். தனிச் சிங்களப் பள்ளிக்கூடங்கள் கூட தமிழீழத்தில் திறக்கப்பட்டன. இதற்கு முட்டுக்கட்டை போட்டார் பிரபாகரன்.

பிரபாகரன் ஆயுதத்தோடு களத்தில் நின்ற 33 ஆண்டுகள்தான் தமிழ்மொழி சிங்கள ஆட்சியாளரின் இனவெறிப் பிடியில் இருந்து தப்பிப் பிழைத்தது.
முள்ளிவாய்க்காலுக்குப் பிறகு மீண்டும் பெயர் மாற்றி மகிழ்கிறார்கள். மல்லாகம் - ‘மளலகம’ ஆகியிருக்கிறது. புங்டுதீவு- ‘புவன்குடீப’ ஆகியிருக்கிறது...

ஒரு தேசிய இனத்தின் உயிர்க் கூறுகளான - மொழி - தாயகம் - மக்கள் - இம்மூன்றும் உடைந்து நொறுங்கி தமிழீழத் திருநிலம் ஒடுங்கி நிற்கிறது.



- குமுதம்
thanks to http://www.yarl.com/forum3/index.php?showtopic=90042

Tuesday, August 2, 2011

தேர்தலில் தமிழக மக்கள் பாடம் கற்பித்தும் இந்திய அரசு திருந்தவில்லை-பழ. நெடுமாறன்

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு நல்ல பாடம் கற்பித்தும்கூட இந்திய அரசு திருந்தவில்லை. இதனால்தான் இலங்கை எம்.பிக்களை நாடாளுமன்றத்திற்கு அழைத்துள்ளது மத்திய அரசு. இந்த துரோகத்தை தமிழக மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்று தமிழ் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சே தலைமையில் வந்துள்ள குழுவினருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு அதிமுக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டம் தொடங்கும் வேளையில் இலங்கை நாடாளுமன்றக் குழு வந்திருப்பது திட்டமிட்ட ஒன்றாகும். சில நாட்களுக்கு முன்னால் இந்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் நிருபமா ராவ் கொழும்பு சென்று ராஜபக்சேவை சந்தித்துப் பேசியதின் விளைவாகவே இக்குழு அனுப்பப்பட்டுள்ளது.

மழைக்காலக் கூட்டத் தொடரில் ஈழத் தமிழர் பிரச்சனை உறுதியாக எழுப்பப்படும் என்ற காரணத்தினால் எதிர்க்கட்சிகளைத் திசைத் திருப்புவதற்கு இலங்கைக் குழுவை இந்திய அரசு திட்டமிட்டு வரவழைத்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தமிழக மக்களின் மன உணர்வுகளை மேலும் மேலும் அவமதிக்கும் வகையில் இந்திய அரசு ராஜபக்சே குழுவுடன் கைகோர்த்து நிற்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் காங்கிரஸ்-திமுக கூட்டணிக்கு நல்ல பாடம் கற்பித்தும்கூட இந்திய அரசு திருந்தவில்லை. தமிழக மக்கள் இந்த துரோகத்தை ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என எச்சரிக்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

thanks tohttp://thatstamil.oneindia.in/news/2011/08/02/neduamaran-accuses-centre-distracting-tamils-issue-aid0128.html