30 July, 2011 by admin
வன்னிப் போரில் அழிவடைந்த சொத்துக்களில் எஞ்சியிருக்கும் இரும்புகளையும் முழுமையாக வன்னியில் இருந்து அகற்றும் நடவடிக்கையில் பாதுகாப்பு அமைச்சு ஈடுபட்டிருக்கின்றது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்றம் இடம்பெறாத பகுதிகளில் இருந்து நாள் தோறும் ஆறு தொடக்கம் பத்து வரையான கனரக வாகனங்களில இரும்புப் பொருட்கள் ஏற்றப்பட்டு தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந் நடவடிக்கையில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் ஈடுபட்டுவருகின்றனர்.
வீடுகளின் கதவுகள், கேற்றுக்கள், வாகனங்கள், தளபாடங்கள் உட்பட்ட வீடுகளில் காணப்படும் அனைத்து இரும்புப் பொருட்களும் ஏற்றப்படுவதாகவும் பெரிய அளவிலான இரும்புப் பொருட்களை துண்டுகளாக்குவதற்கான இயந்திர சாதனங்கள் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக அரச அதிகாரி ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இவ்வாறு ஏற்றப்படும் நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சின் பணிப்பின் கீழேயே முன்னெடுக்கப்படுவதாகவும், கேள்வி கோரல் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை ஒப்பந்தகாரர்களிடம் பாதுகாப்பு அமைச்சு வழங்கியிருப்பதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
வன்னியில் இருந்து இரும்புப் பொருட்களை அகற்றவேண்டும் என்ற பணிப்புரைக்கு அமையவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருட்களை ஏற்றுவோர் தெரிவிப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு கள்ளப்பாட்டினைச் செர்ந்த சம்மாட்டியார் அந்தோனி கிறிஸ்தோப்பர் கருத்துத் தெரிவிக்கையில்,
போரினால் உயிர்களையும், உடைமைகளையும் இழந்த நாங்கள் இறுதியாக கைப்பைகளுடனேயே எமது ஊர்களை விட்டு இடம்பெயர்ந்தோம். மீண்டும் நாங்கள் திரும்பி வருகின்ற போது எமது வீடுகளில் இரும்புகளாவது இருக்கும் என்ற நம்கை இருந்தது. ஆனால் தற்போது எமது சொத்துக்கள் என்று நினைவிற்கு வைத்திருக்க ஒரு இரும்புத் துண்டு கூட இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
முன்னரும் இவ்வாறான நடவடிக்கைகள் விசுவமடு, தர்மபுரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட போது கூட்டமைப்பினரின் தலையீட்டினை அடுத்து அவை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. தற்போதும் இராணுவக் காவலரண்களுக்கு முன்பாக இரும்பு, அலுமினியப் பொருட்களை ஏற்றிச் செல்லத் தடை என விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் மீள்குடியேற்றம் இடம்பெறாத பகுதிகளில் இருந்து நாள் தோறும் ஆறு தொடக்கம் பத்து வரையான கனரக வாகனங்களில இரும்புப் பொருட்கள் ஏற்றப்பட்டு தென்பகுதிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந் நடவடிக்கையில் சிங்களவர்களும், முஸ்லிம்களும் ஈடுபட்டுவருகின்றனர்.
வீடுகளின் கதவுகள், கேற்றுக்கள், வாகனங்கள், தளபாடங்கள் உட்பட்ட வீடுகளில் காணப்படும் அனைத்து இரும்புப் பொருட்களும் ஏற்றப்படுவதாகவும் பெரிய அளவிலான இரும்புப் பொருட்களை துண்டுகளாக்குவதற்கான இயந்திர சாதனங்கள் தென்னிலங்கையில் இருந்து கொண்டுவந்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருவதாக அரச அதிகாரி ஒருவர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
இவ்வாறு ஏற்றப்படும் நடவடிக்கை பாதுகாப்பு அமைச்சின் பணிப்பின் கீழேயே முன்னெடுக்கப்படுவதாகவும், கேள்வி கோரல் அடிப்படையில் இந்த நடவடிக்கைகளை ஒப்பந்தகாரர்களிடம் பாதுகாப்பு அமைச்சு வழங்கியிருப்பதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
வன்னியில் இருந்து இரும்புப் பொருட்களை அகற்றவேண்டும் என்ற பணிப்புரைக்கு அமையவே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொருட்களை ஏற்றுவோர் தெரிவிப்பதாக அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இந்த விடயம் தொடர்பில் முல்லைத்தீவு கள்ளப்பாட்டினைச் செர்ந்த சம்மாட்டியார் அந்தோனி கிறிஸ்தோப்பர் கருத்துத் தெரிவிக்கையில்,
போரினால் உயிர்களையும், உடைமைகளையும் இழந்த நாங்கள் இறுதியாக கைப்பைகளுடனேயே எமது ஊர்களை விட்டு இடம்பெயர்ந்தோம். மீண்டும் நாங்கள் திரும்பி வருகின்ற போது எமது வீடுகளில் இரும்புகளாவது இருக்கும் என்ற நம்கை இருந்தது. ஆனால் தற்போது எமது சொத்துக்கள் என்று நினைவிற்கு வைத்திருக்க ஒரு இரும்புத் துண்டு கூட இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
முன்னரும் இவ்வாறான நடவடிக்கைகள் விசுவமடு, தர்மபுரம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட போது கூட்டமைப்பினரின் தலையீட்டினை அடுத்து அவை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தன. தற்போதும் இராணுவக் காவலரண்களுக்கு முன்பாக இரும்பு, அலுமினியப் பொருட்களை ஏற்றிச் செல்லத் தடை என விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
thanks to http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=321
